twitter
    Find out what I'm doing, Follow Me :)

Monday, June 20, 2011

ராஜா வந்திருக்கிறார்..!!!



எங்கள் வீட்டுக்கு ஒரு நாய் வந்துள்ளது..

அப்பாவுக்கு அவன் இறந்து போன
முன்னோர்கள்

அம்மாவுக்கு அவன் குடும்பத்தில் ஒரு
உறுப்பினர்

பாட்டிக்கு அவன் மனதின் தனிமையை
நிரப்புக்கின்றவன்

எனக்கு அவன் கவலைகளை மறக்கடிக்கும்
விளையாட்டுத்தோழன்

உறவினர்களுக்கு அவன் எங்கள் வீட்டின்
ஆச்சரியம்

தெரு நாய்களுக்கு அவன் வரம்
பெற்றவன்

எங்கள் வீட்டுக்கு ஒரு நாய் வந்துள்ளது.!!!




P.S.- ராஜா வந்திருக்கிறார்,இது கு.அழகிரிசாமியின் சிறுகதைகளில் ஒன்று. எனக்கு இது இருக்கே! உனக்கு இருக்கா! என்று பேசிக்கொள்ளும் சிறுவர்களின் உலகம் பற்றியது. அதை போலவே இந்த கிறுக்களும் அமைந்துள்ளத்தால் இந்த தலைப்பு.

No comments:

Post a Comment