
கறை படிந்த சுவர்கள்
ஓசை எழுப்பும் காற்றாடிகள்
மூக்கை துருத்தும் கண்ணாடிகள்
மக்களை மதியா ஊழியன்கள்
கிடைத்துவிடும் என்ற நம்பிக்கைகள்
ஆகியவை
நம் தேசத்து அரசு அலுவலகங்களின்
அழிக்க முடியா அடையாளங்கள்…
கறை படிந்த சுவர்கள்
ஓசை எழுப்பும் காற்றாடிகள்
மூக்கை துருத்தும் கண்ணாடிகள்
மக்களை மதியா ஊழியன்கள்
கிடைத்துவிடும் என்ற நம்பிக்கைகள்
ஆகியவை
நம் தேசத்து அரசு அலுவலகங்களின்
அழிக்க முடியா அடையாளங்கள்…
தன் சகமனிதனிடம் எதிர்பார்ப்புகள் இன்றி
அன்பும் நேசமும் கனிவும் கொள்ளும்
ஒருவனுக்கு தமிழ்கூறும் நல்லுலகம்
இட்ட பெயர் ‘இளிச்சவாயன்’
பொறுக்கி,
ராஸ்கல்,
இடியட்
என்று என்னை திட்டும் போது
அவளின் அழகு இன்னும் கூடுகிறது
கூடவே என் காதலும்..!!!
மின்னலை போன்ற உன் பார்வை
மழையை போன்ற உன் பேச்சு
தென்றலை போன்ற உன் குணம்
இவை அனைத்தையும் மறக்க துணிந்த
என் நெஞ்சம்
என்னை ஆர தழுவி
என் மேலாடையை விலக்கி
ஊடாக புகுந்து சென்று
நுனிகளை எச்சிலால் ஈரமாக்கி
மேலும் கீழுமாய் புரட்டி
பார்த்தாயானால்
உனக்கு பல செய்திகள்
தருவேன்.
இப்படிக்கு புத்தகம்..!!!
என் எண்ணங்கள்..!!! All Rights Reserved. Blogger Template created by Deluxe Templates
Free Blogger Templates andWordpress Theme by Skinpress, download Free Wordpress Templates