
அழுகையிலும் சிரிக்கிறேன்
சிரிப்பில் அழுகிறேன்
மௌனத்திலும் பேசினேன்
பேச்சிலும் மௌனமானேன்
உறங்காமல் விழித்திருந்தேன்
விழித்திருந்தும் உறங்கினேன்
கோபத்திலும் சாந்தமானேன்
சாந்தத்திலும் கோபமானேன்..!!
இது ஒரு சோதனை முயற்சி... முழுமையாக படித்தால் ஒரு தலை காதலில் உள்ள ஒரு இதயத்தின் குழப்பம்.. ஒவ்வொரு பத்தியிலும் உள்ள முதல் வரிகளை மட்டும் கோர்த்து படித்தால், காதலில் வெற்றி பெற்ற இதயத்தின் நிலை, இரண்டாவது வரிகளை கோர்த்தால் காதலில் தோல்வியுற்ற இதயத்தின் நிலை...
superbbb....
ReplyDelete